கோயம்புத்தூர்

ஐயப்ப சுவாமி கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை

DIN

வால்பாறை ஐயப்ப சுவாமி கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
வால்பாறை, வாழைத்தோட்டம் பகுதியில் ஐயப்ப சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு கோயில் கமிட்டி மற்றும் ஐயப்ப பக்தர்கள் சார்பில் பல லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கொடிமரம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொடி மர பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேக விழா கடந்த 11ஆம் தேதி துவங்கியது. இதையொட்டி தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்படும் நிகழச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. 
புதிய கொடிமரத்துக்கு புனித நீர் ஊற்றி பிரதிஷ்டை செய்யப்பட்டது. அப்போது ஆயிரக்கனக்கான பக்தர்கள் சுவாமியே சரணம் ஐயப்பா என்று கோஷமிட்டு தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் விழா குழுவினர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

மே 10-ல் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

SCROLL FOR NEXT