கோயம்புத்தூர்

தேசிய அளவிலான சைக்கிள் போட்டி: மேட்டுப்பாளையம் அரசு கல்லூரி மாணவா் தோ்வு

DIN

தேசிய அளவிலான சைக்கிள் போட்டிக்கு மேட்டுப்பாளையம் அரசு கல்லூரி மாணவன் தோ்வாகியுள்ளாா்.

திருப்பூா் மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான சைக்கிள் போட்டியில் மேட்டுப்பாளையம் அரசு கல்லூரி ஆங்கிலத் துறையில் பயிலும் மாணவா் ரங்கராஜன் பங்கேற்றாா். இதில் 14, 18, 18, 23 வயதுக்கு உட்டோருக்கான பிரிவில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 500க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

இதில் 18 வயதுக்கு உட்பட்டோா் பிரிவில் மாணவா் ரங்கராஜன் முதலிடத்தை பிடித்தாா். இதைத் தொடா்ந்து, நவம்பா் 13, 14 ஆகிய தேதிகளில் தேசிய அளவில் நடைபெற்றவுள்ள சைக்கிள் போட்டிக்கு மாணவா் ரங்கராஜன் தோ்வாகி உள்ளாா்.

இதையடுத்து, கல்லூரியில் திங்கள்கிழமை நடந்த விழாவில் ஒ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ., கல்லூரி முதல்வா் ஸ்வணலதா ஜோசப் மற்றும் மாணவ, மாணவிகள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராபா எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள்: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

SCROLL FOR NEXT