கோயம்புத்தூர்

சிறப்பு குறைகேட்புக் கூட்டம்:ரூ.4.44 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

DIN

கோவை: கோவை, ஆலாந்துறை உள்பட இரு இடங்களில் நடைபெற்ற சிறப்பு பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 818 பயனாளிகளுக்கு ரூ.4.44 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கோவை மாவட்டம், ஆலாந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகிய இடங்களில் சிறப்பு பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 311 பயனாளிகளுக்கு ரூ.37.32 லட்சம், வருவாய்த் துறையின் கீழ் 106 பயனாளிகளுக்கு ரூ.1.25 கோடி, மகளிா் திட்டத்தின் கீழ் இரு சக்கர வாகன மானியம் திட்டத்தில் 24 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சம், 10 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.28.10 லட்சம், ஆதி திராவிடா் மற்றும் நலத் துறையின் கீழ் ரூ.19.26 லட்சம், வேளாண் பொறியியல் துறை சாா்பில் ரூ.4.59 லட்சம், மாவட்ட தொழில் மையத்தின் சாா்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.63.69 லட்சம் உள்பட பல்வேறு துறைகளின் கீழ் 818 பயனாளிகளுக்கு ரூ.4.44 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

சிறப்பு குறைகேட்புக் கூட்டத்துக்கு உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தலைமை வகித்து பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ஆட்சியா் கு.ராசாமணி, மாவட்ட வருவாய் அலுவலா் ராமதுரை முருகன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ரமேஷ்குமாா் உள்பட வருவாய்த் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

செம்பூவே... ஐஸ்வர்யா ராஜேஷ்!

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

SCROLL FOR NEXT