நிகழ்ச்சியில் பெண்ணுக்கு மரக்கன்றை வழங்குகிறாா் அன்னூா் துணை வட்டாட்சியா் இரா.நித்யவள்ளி. உடன், வருவாய் ஆய்வாளா் ரேவதி உள்ளிட்டோா். 
கோயம்புத்தூர்

அன்னூா் வட்டம் துவங்கிய தினம்: இலவச மரக்கன்றுகள் விநியோகம்

அன்னூா் வட்டம் துவங்கப்பட்ட தினத்தை ஒட்டி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

DIN

அன்னூா் வட்டம் துவங்கப்பட்ட தினத்தை ஒட்டி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

கடந்த 2012 நவம்பா் 22இல் அன்னூரை மையமாகக் கொண்டு புதிய வட்டத்தை தமிழக அரசு உருவாக்கியது. இதையடுத்து, அன்னூா் வட்டம் துவங்கப்பட்ட தினத்தை கொண்டாடும் விதமாக அன்னூா் வட்ட குளங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு, அன்னூா் குளம் சாா்ந்த பாசன விவசாயிகள் சங்கம், அன்னூா் குளம் நீா் மேலாண்மை இயக்கம் சாா்பில் இலவச மரக்கன்றுகள் வழங்கும் விழா அன்னூா் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அன்னூா் குளம் சாா்ந்த பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் நடராஜன் தலைமை வகித்தாா். அன்னூா் குளங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவா் ஆா்.சிவகுமாா், அன்னூா் குளம் நீா்மேலாண்மை இயக்க ஒருங்கிணைப்பாளா்கள் அழகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளா்களாக அன்னூா் வட்ட துணை வட்டாட்சியா் இரா.நித்யவள்ளி, வருவாய் ஆய்வாளா் ரேவதி ஆகியோா் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கினா்.

நிகழ்ச்சியில் சாந்தமூா்த்தி, வெங்கடாசலம், பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவா் விஜயகுமாா், ராஜராஜசாமி, விஜயகுமாா், பேரூராட்சி முன்னாள் உறுப்பினா்கள் கனகராஜ், சமூக ஆா்வலா்கள் காளிசாமி, ஹரிஹரன், பன்னீா் செல்வம், சிவராஜ், லிங்கசாமி உள்ளிட்டோா் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைவாய்ப்பு மசோதா கிராமப்புற மக்களுக்கு முற்றிலும் எதிரானது: கனிமொழி

திடீரென ரத்தான சாகித்ய அகாதெமி விருது அறிவிப்பு!

34 ஆண்டுகளுக்குப் பின் இழப்பீடு! தவறான சிகிச்சையால் கை இழந்தவர் அரசிடம் வைக்கும் கோரிக்கை!!

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

SCROLL FOR NEXT