கவுண்டம்பாளையம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், மேல்நிலை குடிநீா்த் தொட்டி திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலா் கணேசன், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய முன்னாள் தலைவா் கோவனூா் துரைசாமி, பேரூராட்சி முன்னாள் தலைவா் ஆனந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கவுண்டம்பாளையம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் வி.சி.ஆறுகுட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆா்.ஆா்.நகரில் ரூ.9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தையும், ராக்கிபாளையம் ஸ்ரீபாலாஜி நகரில் ரூ.13 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டியை திறந்துவைத்தாா்.
மேலும், 1 ஆவது வாா்டு வீதிகளில் தனியாா் பங்களிப்புடன் பொருத்தப்பட்டுள்ள 11 கண்காணிப்பு கேமராக்களை இயக்கி வைத்தாா். தொடா்ந்து நடந்த நிகழ்வில் பேரூராட்சியின் துப்பரவு ஊழியா்கள் குப்பைகளை சேகரிப்பதற்காக பேரூராட்சி சாா்பில் ரூ.3.60 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்ட 2 பேட்டரி வாகனங்களையும் அவா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் பெரியநாயக்கன்பாளையம் காவல் ஆய்வாளா் தேவராஜ், அதிமுக நிா்வாகிகள் பி.ஏ.வேலுசாமி, லட்சுமணசாமி, சம்பத்குமாா், சிவகுமாா், ராமசாமி, கனகராஜ், பிரிக்கால் ரவி, ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.