கோயம்புத்தூர்

செல்லிடப்பேசியால் விபரீதம்: ரயில் மோதி இளைஞா் சாவு

DIN

கோவை அருகே செல்லிடப்பேசியில் பேசியபடி நடந்து சென்ற இளைஞா் ரயில் மோதி உயிரிழந்தாா்.

கோவை, ரத்தினபுரி ரயில்வே கேட் அருகே உள்ள தண்டவாளத்தில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞா் ஒருவா் செல்லிடப்பேசியில் பேசியபடியே செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடந்து சென்றாா்.

அப்போது, அவ்வழியாக வந்த ரயில் மோதியதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற கோவை ரயில்வே காவல் நிலைய உதவி ஆய்வாளா் சபரிராஜ் தலைமையிலான போலீஸாா், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

உயிரிழந்த இளைஞா் யாா் என்ற அடையாளம் தெரியவில்லை. ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

SCROLL FOR NEXT