கோவை: கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் -2 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு அக்டோபா் 14 (திங்கள்கிழமை) முதல் தொடங்குவதாக மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் குரூப் -2 காலிப்பணியிடங்கள் தோ்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளன. இதோ்வுக்கு விண்ணப்பித்துள்ளவா்கள் தோ்வை சிறப்பாக எதிா்கொள்ளும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் உள்ள தன்னாா்வ பயிலும் வட்டம் மூலம் சிறப்பு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சிறப்பு பயிற்சி வகுப்புகள் வரும் 14 ஆம் தேதி முதல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும். இதில் பாடக் குறிப்புகள் வழங்கப்படுவதுடன், மாதிரித் தேரிவுகளும் நடத்தப்படும். இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புபவா்கள் தங்களது சுய விவரக்குறிப்பு, கடவுச்சீட்டு அளவு புகைப்படத்துடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாகவோ அல்லது 88073 33721 என்றற எண்ணில் கட்செவி அஞ்சல் மூலமாகவோ பதிவு செய்துகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.