கொள்ளை வழக்கில் நீண்ட நாள்களாக தலைமறைவாக இருந்த நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கோவை காட்டூா் குற்றப் பிரிவு காவல்நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் கடந்த ஆண்டு நடைபெற்ற கொள்ளை வழக்கில் ராமநாதபுரம், மருதூா் சாலை அருகே உள்ள எம்.என்.ஜி வீதியைச் சோ்ந்த சுரேஷ் (33) உள்ளிட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கைதான 5 பேரும் பிணையில் வெளியே வந்தனா். இந்த வழக்கு விசாரணை கோவை மாவட்ட நீதித் துறை நடுவா் மன்றத்தில் (எண்.2) நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சுரேஷ் தலைமறைவானாா்.
இதையடுத்து, சுரேஷைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே சுற்றித் திரிந்த சுரேஷை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.