கோயம்புத்தூர்

பாம்பு கடித்து ஒடிஸா  தொழிலாளி உயிரிழப்பு

DIN

பாம்பு கடித்த ஒடிஸா மாநிலத் தொழிலாளி சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்தவர் பாபுல்லா மகன் கணேஷ் மொஹந்தி (19). கோவை, மதுக்கரை அரிசிபாளையம் பகுதியில் உள்ள தோட்டத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கூலி வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை கணேஷ் மொஹந்தி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரைப் பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து, அவரை மீட்ட சக தொழிலாளிகள் சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி கனேஷ் மொஹந்தி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளறுகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

SCROLL FOR NEXT