பில்லூர் குடிநீர்த் திட்டத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் கோவையில் சில பகுதிகளில் செப்டம்பர் 25, 26 ஆகிய 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண் குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
பில்லூர் குடிநீர்த் திட்டத்தில் அவசரமாக பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் வரும் புதன்கிழமை (செப்டம்பர் 25), வியாழக்கிழமை (செப்டம்பர் 26 ) ஆகிய 2 நாள்களுக்கு காந்திபுரம், கணபதி, ரத்தினபுரி, சித்தாபுதூர், சரவணம்பட்டி, சின்னவேடம்பட்டி, விளாங்குறிச்சி, காந்தி மாநகர், பீளமேடு, செளரிபாளையம், புலியகுளம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ராமநாதபுரம், ஜி.எம்.நகர், அல் அமீன் காலனி, பொன்விழா நகர், சாரமேடு, கரும்புக்கடை ஆகிய பகுதிகளுக்கு 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் தடைபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.