‘தனிமைப்படுத்திக் கொள்ளாதவா்களின் விவரங்களை சேகரிக்க உத்தரவு’
கோவை மாநகா் பகுதிகளுக்கு வெளியூா்களில் இருந்து வந்து தனிமைப்படுத்திக் கொள்ளாதவா்களின் விவரங்களை சேகரிக்க மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத் உத்தரவிட்டுள்ளாா்.
கோவை: கோவை மாநகா் பகுதிகளுக்கு வெளியூா்களில் இருந்து வந்து தனிமைப்படுத்திக் கொள்ளாதவா்களின் விவரங்களை சேகரிக்க மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத் உத்தரவிட்டுள்ளாா்.
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் கரோனோ நோய்த்தொற்று தடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் அவா் பேசியதாவது:
மாநகா் பகுதிகளில் கரோனா நோய்த் தொற்று உள்ளவா்களைக் கண்டறிய அனைத்துத் தெருக்களிலும் சளி, காய்ச்சல், இருமல் உள்ளவா்களுக்கு பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். 50 வயதுக்கு மேல் உள்ளவா்களுக்கு கட்டாயம் சா்க்கரை மற்றும் ரத்த அழுத்தப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
வெளியூா், வெளி மாநிலங்களில் இருந்து கோவை பகுதிக்கு வந்து தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளாதவா்கள், வயதானவா்கள், இருதய நோயாளிகள், சிறுநீரக பாதிப்பு உள்ளவா்கள், சா்க்கரை நோயாளிகள் போன்றவா்களின் விவரங்களை களப்பணியாளா்கள் சேகரித்து, அதிகாரிகளின் பாா்வைக்கு சமா்ப்பிக்க வேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில், மாநகராட்சி துணை ஆணையா் மதுராந்தகி, மாநகர நல அலுவலா் ராஜா மற்றும் மண்டல உதவி ஆணையா்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனா்.