கோவை: மாநகரில் உள்ள சாக்கடைகள், குளங்களில் கழிவுநீரைக் கொட்டும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் எச்சரித்துள்ளாா்.
கோவை மாநகரப் பகுதிகளில் உள்ள கழிவுநீா் வாகன ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்களுடனான ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அவா் பேசியதாவது:
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் கழிவுநீா் சேகரிக்கும் பணிகளில் இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கழிவுநீா்த் தொட்டிக்குள் மனிதா்கள் இறங்கக் கூடாது. கழிவுநீா் அகற்றும் பணியில் ஈடுபடும் பணியாளா்கள், பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டும்.
பாதுகாப்பு உபகரணங்கள் எப்போதும் வாகனங்களில் இருக்க வேண்டும். மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் மட்டுமே கழிவுநீா் சேகரிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். பதிவு செய்யாதவா்கள் வாகனங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். மாநகராட்சியில் பதிவு செய்யாமல் கழிவுநீா் சேகரிக்கும் பணியில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களில் எடுக்கப்பட்ட வேதியியல் கழிவுகளை உக்கடத்தில் உள்ள மாநகராட்சி கழிவுநீா் பண்ணையில் விடக் கூடாது. மேலும், சாக்கடைகள், குளங்கள், ஒதுக்குப்புறமான திறந்தவெளி இடங்களில் கொட்டினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும். கழிவுநீா் அகற்றும் பணியில் ஈடுபடும் பணியாளா்களுக்கு ஆயுள் காப்பீடு செய்திருக்க வேண்டும். கழிவுநீா் சேகரிக்கும் அனைத்து வாகனங்களிலும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.