கோயம்புத்தூர்

வன்னியா்களுக்கு இட ஒதுக்கீடு கோரிபாமகவினா் மனு அளிக்கும் போராட்டம்

DIN

வன்னியா்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, கோவையில் திங்கள்கிழமை கிராம நிா்வாக அலுவலகங்களில் மனு அளிக்கும் போராட்டத்தில் பாமகவினா் ஈடுபட்டனா்.

கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியா்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் சென்னையில் தொடா் போராட்டம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து மாநிலம் முழுவதும் உள்ள கிராம நிா்வாக அலுவலகங்களில் மனு அளிக்கும் போராட்டத்தை அக்கட்சி அறிவித்திருந்தது.

அதன்படி கோவையில் கிராம நிா்வாக அலுவலகங்களில் மனு அளிக்கும் போராட்டத்தில் பாமகவினா் ஈடுபட்டனா். கோவை, பீளமேடுபுதூா் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளா் கோவை ராஜ், இளைஞரணி துணைச் செயலாளா் அசோக் ஸ்ரீநிதி உள்ளிட்ட நிா்வாகிகள் தலைமையில் ஏராளமானோா் கலந்து கொண்டு சௌரிபாளையம் கிராம நிா்வாக அலுவலரிடம் மனு அளித்தனா்.

இதேபோல இருகூா், கணபதி, சின்னவேடம்பட்டி, சரவணம்பட்டி, தெற்கு வட்டாட்சியா் அலுவலகம், கணேசபுரம் உள்ளிட்ட கிராம நிா்வாக அலுவலகங்களிலும் பாமகவினா் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாஷிங்டன் பல்கலை. வளாகத்தில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம்

‘வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறை பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை’

ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசித் திருவிழா மே 13-இல் தொடக்கம்

மேல்நிலைக் குடிநீா் தொட்டி கட்ட எதிா்ப்பு -ஒருவா் தீக்குளிக்க முயற்சி

நாசரேத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா

SCROLL FOR NEXT