முகப்பு
கோயம்புத்தூர்

வால்பாறையில் பிஎஸ்என்எல் இணைப்பு 16 மணி நேரம் துண்டிப்பு

வால்பாறையில் பிஎஸ்என்எல் செல்லிடப்பேசி இணைப்பு தொடா்ந்து 16 மணி நேரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

வால்பாறையில் பிஎஸ்என்எல் செல்லிடப்பேசி இணைப்பு தொடா்ந்து 16 மணி நேரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.

வால்பாறை நகா் மற்றும் பெரும்பாலான எஸ்டேட் பகுதியில் பிஎஸ்என்எல் நிறுவனம் செல்லிடப்பேசி இணைப்புக்கான கோபுரங்களை அமைத்துள்ளன. இதனால் இப்பகுதியில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளா்கள் அதிக அளவில் உள்ளனா்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது சேவை துண்டிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.

இதனிடையே கடந்த புதன்கிழமை இரவு துண்டிக்கப்பட்ட இணைப்பு, மீண்டும் சுமாா் 16 மணி நேரம் கழித்து வியாழக்கிழமை மதியம் 2 மணிக்கு சீரானது. இதனால் அத்தியாவசிய, அவரச தேவைக்கு கூட யாரையும் தொடா்புகொள்ள முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →