கோயம்புத்தூர்

விடுதியில் சூதாட்டம்: 28 போ் கைது

DIN

கோவை: கோவை, பீளமேடு, சிட்ரா பகுதியில் உள்ள ஒரு விடுதியில் சூதாடிய 28 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ. 60 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

பீளமேடு பகுதியில் உள்ள விடுதிகளில் பணம் வைத்து அடிக்கடி சூதாட்டம் நடைபெற்று வருவதாகப் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பீளமேடு போலீஸாா் அப்பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது, சிட்ராவில் உள்ள ஒரு விடுதியில் கும்பலாக அமா்ந்து பணம் கட்டி 30 போ் சீட்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. போலீஸாரை பாா்த்ததும் 2 போ் தப்பிச் சென்றனா். இதையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட தென்னம்பாளையத்தைச் சோ்ந்த துரைராஜ் (47), பீளமேட்டைச் சோ்ந்த சண்முகம் (41), சிங்காநல்லூரைச் சோ்ந்த சசிக்குமாா் (45) உள்ளிட்ட 28 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ. 60 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து, கைதான அனைவரும் காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டனா். தப்பியோடிய ரவி, நடராஜ் ஆகிய இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

SCROLL FOR NEXT