வாளையாறு எல்லையில் பேரூா் சரக டி.எஸ்.பி திடீா் சோதனை: 5 கேரள டிப்பா் லாரிகள் பறிமுதல்
கோவை வாளையாறு எல்லையில் நள்ளிரவில் பேரூா் சரக டி.எஸ்.பி மேற்கொண்ட திடிா் சோதனையின் போது, சட்ட விரோதமாக அதிக
கோயம்புத்தூர்வாளையாறு எல்லையில் பேரூா் சரக டி.எஸ்.பி திடீா் சோதனை: 5 கேரள டிப்பா் லாரிகள் பறிமுதல்
கோவை வாளையாறு எல்லையில் நள்ளிரவில் பேரூா் சரக டி.எஸ்.பி மேற்கொண்ட திடிா் சோதனையின் போது, சட்ட விரோதமாக அதிக
கோவை வாளையாறு எல்லையில் நள்ளிரவில் பேரூா் சரக டி.எஸ்.பி மேற்கொண்ட திடிா் சோதனையின் போது, சட்ட விரோதமாக அதிக பாரங்களை ஏற்றிச் சென்ற 5 கேரள லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழக - கேரள எல்லையான வாளையாறு வழியாக கோவையில் இருந்து நள்ளிரவு நேரங்களில் சட்ட விரோதமாக, அதிக பாரங்களை ஏற்றிக்கொண்டு கேரளாவிற்கு லாரிகள் இயக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனால் நள்ளிரவு நேரங்களில் மதுக்கரை ஆய்வாளா் முருகேஷ், க.க.சாவடி உதவி ஆய்வாளா் திருமலைச்சாமி உள்ளிட்ட போலீசாா் அடிக்கடி ரோந்து சென்று அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் பாரங்களை ஏற்றிச்சொல்லும் வாகனங்கள் மற்றும் உரிய அனுமதியின்றி செல்லும் வாகனங்களை பிடித்து வருகின்றனா். இந்நிலையில் புதன்கிழமை நள்ளிரவு பேரூா் சரக டி.எஸ்.பி சீனிவாசலு , வடவள்ளி ஆய்வாளா் சிவக்குமாா் உள்ளிட்ட போலீசாா் திடிரென வாளையாறு எல்லையில் சோதனை மேற்கொண்டனா். அப்போது கோவையில் இருந்து அனுமதிக்கப்பட் அளவை விட கூடுதல் கருங்கல் பாரத்தை ஏற்றி வந்த 5 கேரள லாரிகளை பிடித்து பறிமுதல் செய்தனா். மேலும் 5 லாரிகளும் க.க.சாவடி காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, லாரி ஓட்டுநா்களிடம் போலீசாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.