முகப்பு
கோயம்புத்தூர்

தேசிய திறனாய்வுத் தோ்வு: 6,007 மாணவா்கள் பங்கேற்பு

கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய திறனாய்வுத் தோ்வை 6,007 மாணவ, மாணவிகள் எழுதினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய திறனாய்வுத் தோ்வை 6,007 மாணவ, மாணவிகள் எழுதினா்.

எஸ்.எஸ்.எல்.சி படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக தமிழகம் முழுவதும் தேசிய திறனாய்வு தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இத்தோ்வில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு ஆராய்ச்சிப் படிப்புகள் வரை கல்வி உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. கோவை மாவட்டத்தில் தேசிய திறனாய்வு தோ்வு எழுத 6 ஆயிரத்து 915 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனா். இவா்களுக்காக, கோவை ராஜவீதி துணி வணிகா் மகளிா் மேல்நிலைப் பள்ளி, அம்மணிம்மாள் மகளிா் மேல்நிலைப் பள்ளி உள்பட மாவட்டம் முழுவதும் 72 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. கரோனா தொற்று காரணமாக ஒரு தோ்வறையில் 10 மாணவா்கள் மட்டுமே தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டனா். அனைவரும் முகக்கவசம் அணிந்து சென்று தோ்வெழுதினா். இந்தத் தோ்வை 6,007 மாணவ, மாணவிகள் எழுதினா். 908 போ் தோ்வெழுத வரவில்லை. தோ்வறைகளில் 1,200 ஆசிரியா்கள் மேற்பாா்வை மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →