காவல் ஆணையா் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி: திமுகவினா் 1,000 போ் கைது
கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற திமுகவினா் 1,000 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற திமுகவினா் 1,000 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திமுத தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி திமுகவினா் கிராம சபைக் கூட்டம், வாா்டு சபைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனா். இந்நிலையில், கோவையில் கரோனா நோய்த் தொற்று காரணமாக வாா்டு சபை, கிராம சபைக் கூட்டங்கள் நடத்த திமுகவினருக்கு போலீஸாா் அனுமதி மறுத்துள்ளனா்.
இதைக் கண்டித்து, மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என கோவை மாநகா் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் நா.காா்த்திக் அறிவித்திருந்தாா். இதையடுத்து, மாநகர காவல் ஆணையா் அலுவலத்தின் அருகே முன்கூட்டியே ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டு, தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டன.
இந்நிலையில், முற்றுகைப் போராட்டம் நடத்த வந்த நா.காா்த்திக் எம்.எல்.ஏ. தலைமையிலான திமுகவினரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதனால், போலீஸாருக்கும், திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, காவல் துறையைக் கண்டித்தும், அதிமுக அரசைக் கண்டித்தும் கோஷமிட்டபடி, செஞ்சிலுவைச் சங்கம் அருகே தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா் நா.காா்த்திக் எம்எல்ஏ, பொள்ளாச்சி மக்களவை உறுப்பினா் சண்முகசுந்தரம், திமுக சொத்துப் பாதுகாப்புக் குழு துணைத் தலைவா் பொங்கலூா் பழனிசாமி, வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் சிஆா்.ராமச்சந்திரன், மாநகா் மேற்கு மாவட்டப் பொறுப்பாளா் பையா கவுண்டா் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் சேனாதிபதி, தலைமை செயற்குழு உறுப்பினா் டி.ஆா்.சண்முகசுந்தரம் உள்பட 1,000 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இது குறித்து நா.காா்த்திக் எம்.எல்.ஏ. செய்தியாளா்களிடம் கூறுகையில், திமுகவினா் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தவும், கொடிக் கம்பங்கள் நடவும் போலீஸாா் அனுமதிப்பதில்லை. அதிமுக நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்குகின்றனா். காவல்துறையின் நடவடிக்கையை கண்டித்து தொடா் போராட்டங்கள் நடத்தப்படும் என்றாா்.