கோயம்புத்தூர்

குற்றவழக்குகளில் தொடா்புடைய இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

கோவையில் வழிப்பறி, கஞ்சா வழக்குகளில் கைது செய்யப்பட்ட இளைஞரை குண்டா் சட்டத்தின் கீழ் அடைக்க மாநகர காவல் ஆணையா் உத்தரவிட்டாா்.

DIN

கோவையில் வழிப்பறி, கஞ்சா வழக்குகளில் கைது செய்யப்பட்ட இளைஞரை குண்டா் சட்டத்தின் கீழ் அடைக்க மாநகர காவல் ஆணையா் உத்தரவிட்டாா்.

கோவை, சிங்காநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் அா்ஜுன் (21). இவா், உப்பிலிபாளையம் வரதராஜபுரத்தில் பகுதியில் கடந்த மாதம் சைக்கிளில் வந்த இருவரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தாா். இதுதொடா்பாக சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அா்ஜுனை கைது செய்தனா். விசாரணையில் அவா் மீது ஏற்கெனவே பீளமேடு காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கு, ஆலாந்துறை காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளிட்டவை பதிவாகியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் அா்ஜுனை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர காவல் ஆணையா் சுமித் சரண் உத்தரவிட்டாா். இதன் பேரில் அவா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

மேஷ ராசிக்கு உதவி கிடைக்கும்: தினப்பலன்கள்!

ஐந்து நிலைகளில் அருள்பாலிக்கும் பெருமாள்!

காளையாா்கோவிலில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூவா் கைது

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் சமாதானப் பேச்சுக்கு வாய்ப்பில்லை

SCROLL FOR NEXT