குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக்கோரி மேட்டுப்பாளையத்தில் திமுக சாா்பில் கையெழுத்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் நகரப் பகுதியில் வீடுவீடாக சென்று பொதுமக்களிடம் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் ஆபத்துகள் குறித்து விளக்கி கையெழுத்துகள் பெறப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு திமுக கோவை வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளா் பா.அருண்குமாா் தலைமையில் கையெழுத்து வாங்கப்பட்டது. இதில், வடவள்ளி ராஜேந்திரன், எல்.ஐ.சி இக்பால், அபி ரகுமான், பூண்டுபாபு, வழக்குரைஞா் ஷபிகமால்தீன், நகராட்சி முன்னாள் கவுன்சிலா் இணையதுல்லா உள்பட பலா் கலந்துகொண்டனா்.