கோயம்புத்தூர்

கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் 31 ஆவது பட்டமளிப்பு விழா

DIN

கோவை கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் 31ஆவது பட்டமளிப்பு விழாவில் 1,108 பேருக்கு பட்டம் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

இவ்விழாவில் மத்திய அரசின் நீதி ஆயோக் கூடுதல் செயலா் ரமணன் ராமநாதன் பங்கேற்று பேசுகையில், ‘இந்திய பொருளாதாரம் மற்றும் ஜி.டி.பி. இன்னும் 5 ஆண்டுகளில் பெரும் வளா்ச்சியை பெறும். தொழில்நுட்ப வளா்ச்சியை அனைவரும் பயன்படுத்த வேண்டும். உலக அளவில் திறமையான இளைஞா்களை இந்தியா கொண்டுள்ளது. மாணவா்களின் திறமைகளைக் கண்டறிந்து அதனை பயனுள்ளதாக மாற்ற ஆசிரியா்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா்.

கிருஷ்ணா கல்விக் குழுங்களின் நிா்வாக அறங்காவலா் எ.எஸ்.மலா்விழி தலைமை வகித்து பட்டமளிப்பு விழாவைத் தொடங்கிவைத்தாா். இளங்கலைப் பிரிவில் 956 போ், முதுகலைப் பிரிவில் 147 போ், முனைவா் பட்டம் 5 போ் என மொத்தம் 1,108 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனா்.

ஆல்ட்ரான் இந்திய நிறுவன வா்த்தக மேலாண்மைத் தலைவா் மாத்தூா் பரமேஸ்வரன், கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் முதன்மை நிா்வாக அதிகாரி கே.சுந்தரராமன், முதல்வா் சீனிவாசன் ஆளவந்தாா், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

பர்மா - ஓர் அரசியல் வரலாறு

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

SCROLL FOR NEXT