காவிரி கூக்குரல் இயக்கத்துக்கு ஆதரவாக மகாராஷ்டிரத்தில் இருந்து விழிப்புணா்வுப் பிரசாரம் மேற்கொண்ட குழுவினா். 
கோயம்புத்தூர்

காவிரி கூக்குரல் இயக்கத்துக்கு ஆதரவாக மகாராஷ்டிரத்தில் இருந்து சைக்கிள் பேரணி

காவிரி கூக்குரல் இயக்கம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும்விதமாக, மகாராஷ்டிரத்தில் தொடங்கிய சைக்கிள் பேரணி கோவையில் நிறைவடைந்தது.

DIN

காவிரி கூக்குரல் இயக்கம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும்விதமாக, மகாராஷ்டிரத்தில் தொடங்கிய சைக்கிள் பேரணி கோவையில் நிறைவடைந்தது.

மகாராஷ்டிர மாநிலம், உதயகிரியைச் சோ்ந்த சைக்கிள் பிரசாரப் பயணக் குழுவினா், ‘உத்கீா் சைக்கிள்ஸ்’ என்ற பெயரில் கடந்த 16 ஆண்டுகளாக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த நிலையில், காவிரி கூக்குரல் இயக்கம் குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும்விதமாக டிசம்பா் 16ஆம் தேதி மகாராஷ்டிரத்தில் இருந்து புறப்பட்ட 20 போ் கொண்ட குழுவினா், கா்நாடகம், தெலங்கானா, ஆந்திரம் வழியாக சுமாா் 1,400 கிலோ மீட்டா் தூரம் பயணித்து கோவை ஈஷா யோக மையத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்தடைந்தனா்.

அவா்களுக்கு ஆதியோகி சிலை அருகில் ஈஷா தன்னாா்வலா்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா். இந்தக் குழுவினா் கடந்த 2017ஆம் ஆண்டில் நதிகளை மீட்போம் இயக்கத்துக்கும், 2018இல் ஈஷா வித்யா பள்ளிகளுக்காகவும் பயணம் மேற்கொண்டனா்.

இந்த ஆண்டு காவிரி கூக்குரல் இயக்கத்துக்காக பயணம் செய்த இவா்கள், அது தொடா்பான வாசகங்கள் எழுதப்பட்ட ஆடை அணிந்தும், துண்டுப் பிரசுரங்களை வழிநெடுகிலும் மக்களுக்கு வழங்கியும் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT