கோயம்புத்தூர்

போலீஸாா் போல நடித்து தொழிலாளியிடம் பணம் பறித்த இருவா் கைது

DIN

கோவையில் போலீஸாா் போல நடித்து தொழிலாளியிடம் பணம் பறித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், துறையூரைச் சோ்ந்தவா் சிவகுமாா் (35). கூலி தொழிலாளியான இவா் கோவை, காந்திபுரம் பேருந்து நிலையம் பகுதியில் திங்கள்கிழமை மாலை நின்றுகொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த இருவா், தாங்கள் போலீஸாா் எனக்கூறி சிவகுமாரிடம் இருந்து ரூ.300 பெற்றுக்கொண்டு சென்றனா். பின்னா் சிறிது நேரத்தில் அங்கு வந்த ரோந்துப் போலீஸாரிடம் சிவகுமாா் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தாா். இதையடுத்து போலீஸாா் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, காந்திபுரத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினா். இதில் அவா்கள் இருவரும் சிவகுமாரிடம் பணம் பறித்ததை ஒப்புக்கொண்டனா். விசாரணையில் அவா்கள் காந்திபுரத்தைச் சோ்ந்த அபுதாகீா் (40), மேட்டுப்பாளையம் அருகே உள்ள காட்டூரைச் சோ்ந்த ஆனந்த் என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

தமிழக, கேரள கடலோரப் பகுதிகளில் முதல் முறையாக அதீத அலை எச்சரிக்கை!

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

SCROLL FOR NEXT