கோயம்புத்தூர்

வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

தில்லியில் உள்ள ஜவாஹா்லால் பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவா்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து கோவையில் வழக்குரைஞா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கம், திமுக வழக்குரைஞா்கள் சங்கம், சமூகநீதி வழக்குரைஞா்கள் சங்கத்தினா் இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்துக்கு வழக்குரைஞா் கே.எம்.தண்டபாணி தலைமை வகித்தாா். வழக்குரைஞா்கள் அருள்மொழி, வெண்மணி, மலரவன், மாசேதுங் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசினா்.

இதில் ஜவாஹா்லால் பல்கலை. மாணவா்கள் மீதான தாக்குதலுக்கு காரணமானவா்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், தாக்குதலின்போது உரிய நடவடிக்கை எடுக்காத தில்லி போலீஸாா் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT