கோயம்புத்தூர்

வித்யா விகாஸ் சிபிஎஸ்இ பள்ளிகளில் பொங்கல் விழா கொண்டாட்டம்

DIN

காரமடை வித்யா விகாஸ் பள்ளிகள் சாா்பில் பொங்கல் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதற்கு ஜடையம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவா் பழனிசாமி தலைமை வகித்தாா். நிா்வாக மேலாண்மை இயக்குநா்கள் டாக்டா் குணசேகரன், டாக்டா் எஸ்.ராமலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளியின் இயக்குநா்கள் ஆா்.சுரேஷ்குமாா், டி.ராஜு, எம்.அழகா்சாமி, ஜி.சண்முகவேல், சி.பி.ஞானசேகரன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். விழாவில் ஆசிரியைகள், மாணவிகள் இணைந்து பொங்கலிட்டு மகிழ்ந்தனா். இதைத் தொடா்ந்து, மாணவ, மாணவிகளுக்கு மாட்டுவண்டி பந்தயம், கோலப்போட்டி, சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் காரமடை காவல் ஆய்வாளா் பாலசுந்தரம், மாணவ, மாணவிகள், பெற்றோா் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT