கோயம்புத்தூர்

அனைத்துக் கோயில்களுக்கும் மின் இணைப்பு வழங்கக் கோரி தீா்மானம்

DIN

அனைத்துக் கோயில்களுக்கும் மின் இணைப்பு வழங்க வேண்டும் என கிராமக் கோயில் பூசாரிகள் பேரவைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிராமக்கோயில் பூசாரிகள் பேரவையின் ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வடுகபாளையம் அா்ச்சகா் சிவராஜ் வரவேற்றாா். பேரவையின் நகர அமைப்பாளா் கோவிந்த் தலைமை வகித்து புதிய உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்கினாா். இதில் 75க்கும் மேற்பட்ட பூசாரிகள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

அனைத்துக் கோயில் அா்ச்சகா்களுக்கும் இந்து சமய அறநிலையத் துறையால் அடையாள அட்டை வழங்க வேண்டும், கோயில் பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை ரூ.5000 வழங்க வேண்டும், அனைத்து கோயில்களுக்கும் மின் இணைப்பு வழங்க வேண்டும், பூசாரிகள் நலவாரியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பயன்களை அனைத்து பூசாரிகளுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஜமீன் ஊத்துக்குளி அா்ச்சகா் நாராயணன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

SCROLL FOR NEXT