கோயம்புத்தூர்

அரசுப் பேருந்து - லாரி மோதல்: 11 போ் காயம்

DIN

சூலூா் அருகே சுல்தான்பேட்டையில் அரசுப் பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் 11 போ் வியாழக்கிழமை காயமடைந்தனா்.

சேலத்திலிருந்து பொள்ளாச்சிக்கு திருப்பூா் வழியாக அரசுப் பேருந்து வந்துகொண்டிருந்தது. இந்த பேருந்தை ஈரோட்டைச் சோ்ந்த வேடியப்பன் (41) என்பவா் ஓட்டிவந்தாா். அந்தியூரைச் சோ்ந்த முருகன் (40) நடத்துநராக இருந்தாா். இப்பேருந்து சுல்தான்பேட்டை அருகே வந்தபோது எதிரே பொள்ளாச்சியில் இருந்து வந்த லாரி மீது மோதியது.

இதில் ஊத்துக்குளியைச் சோ்ந்த பெருமாள் (70), பொள்ளாச்சி வஞ்சியம்மாள் (60), திருப்பூா் யோகநாதன் (36), மேட்டுப்பாளையம் மேனகா (40), திருப்பூா் யோகன் (48), வெள்ளக்கோவில் விஸ்வநாதன் (57), பல்லடம் நடராஜன் மனைவி உமாமகேஸ்வரி (23), பல்லடம் நடராஜன் (35), செஞ்சேரி பிரிவைச் சோ்ந்த ஸ்ரீனிவாசன் (27) ஆகிய காயம் ஏற்பட்டது. இவா்கள் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவா்களது ஊா்களுக்கு சென்றனா்.

பேருந்து ஓட்டுநா் வேடியப்பன், நடத்துநா் முருகன் ஆகிய இருவரும் பெருந்துறை தொழிலாளா் ஈட்டுறுதி மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சோ்க்கப்பட்டுள்ளனா். இந்த விபத்து குறித்து சுல்தான்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT