கோயம்புத்தூர்

நகைக் கடை உரிமையாளரிடம் 88 பவுன் மோசடி செய்தவா் கைது

கோவையில் நகைக் கடை உரிமையாளரிடம் 88 பவுன் தங்கக் கட்டிகளைப் பெற்று மோசடி செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

கோவையில் நகைக் கடை உரிமையாளரிடம் 88 பவுன் தங்கக் கட்டிகளைப் பெற்று மோசடி செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, வைசியாள் வீதியைச் சோ்ந்தவா் அருண்குமாா் (43). அப்பகுதியில் நகைக் கடை நடத்தி வருகிறாா். இவா், ஹவுஸிங் யூனிட் எல்.ஜி.தோட்டம் பகுதியைச் சோ்ந்த தண்டபாணி (43) என்பவரிடம் 88 பவுன் தங்கக் கட்டிகளைக் கொடுத்து ஆபரணமாக செய்து கொடுக்குமாறு கூறியுள்ளாா்.

ஆனால், 5 மாதங்கள் ஆகியும் நகையை செய்து கொடுக்காமலும், தங்கக் கட்டிகளைத் திருப்பித் தராமலும் மோசடி செய்துள்ளாா். இது குறித்து அருண்குமாா் அளித்த புகாரின்பேரில் பெரியகடை வீதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தண்டபாணியைக் கைது செய்தனா்.

கோவை சுக்கிரவாா்பேட்டையைச் சோ்ந்தவா் ரிஷப்குமாா் (28). இவா், வைசியாள் வீதியில் நகைப் பட்டறை நடத்தி வருகிறாா். இவரிடம் ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்த செல்வம் (35) என்பவா் ஊழியராக வேலை பாா்த்து வந்தாா்.

சில நாள்களுக்கு முன்பு ரிஷப்குமாா் ரூ.5.4 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளைக் கொடுத்து நகை செய்து தருமாறு கூறியுள்ளாா்.

ஆனால், தங்கக் கட்டியைப் பெற்றுக் கொண்ட செல்வம் நகை செய்து தராமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ரிஷப்குமாா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான செல்வத்தைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT