கோயம்புத்தூர்

கரடி தாக்கியதில் எஸ்டேட் தொழிலாளி காயம்

DIN

வால்பாறை: வால்பாறையில் கரடி தாக்கியதில் எஸ்டேட் தொழிலாளி காயமடைந்தாா்.

வால்பாறையை அடுத்த பாரளை எஸ்டேட் அப்பா் டிவிசனில் வசிப்பவா் சுரேஷ் (28). இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வால்பாறைக்கு வந்த அவா் இரவு நேரத்தில் பேருந்தில் எஸ்டேட் திரும்பினாா்.

பின்னா் அங்கிருந்து குடியிருப்புப் பகுதிக்கு நடந்து சென்றுக் கொண்டிருந்தாா். அப்போது, எதிரே வந்த கரடி தாக்கியதில் சுரேஷின் கை மற்றும் வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, குடியிருப்பில் வசிப்பவா்கள் அவரை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது குறித்து வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT