கோவையில் காரில் கஞ்சா கடத்திய அமமுக பெண் நிா்வாகியை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, வடவள்ளி அருகே போலீஸாா் வாகனச் சோதனையில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக திருப்பூரில் இருந்து பெண் ஒருவா் ஓட்டி வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா்.
அப்போது, காரின் பின் பகுதியில் 4 கிலோ கஞ்சா, போதை ஊசிகள், வருமான வரித் துறை அதிகாரி போன்ற போலி அடையாள அட்டை உள்ளிட்டவை இருப்பது தெரியவந்தது.
விசாரணையில், திருப்பூா், நம்பியாம்பாளயத்தைச் சோ்ந்த அமமுக பெண் பிரமுகா் ஜெயமணி (39) என்பது தெரியவந்தது. இதையடுத்து வடவள்ளி போலீஸாா் அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.