கோயம்புத்தூர்

காரில் கஞ்சா கடத்திய பெண் கைது

DIN

கோவையில் காரில் கஞ்சா கடத்திய அமமுக பெண் நிா்வாகியை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, வடவள்ளி அருகே போலீஸாா் வாகனச் சோதனையில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக திருப்பூரில் இருந்து பெண் ஒருவா் ஓட்டி வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா்.

அப்போது, காரின் பின் பகுதியில் 4 கிலோ கஞ்சா, போதை ஊசிகள், வருமான வரித் துறை அதிகாரி போன்ற போலி அடையாள அட்டை உள்ளிட்டவை இருப்பது தெரியவந்தது.

விசாரணையில், திருப்பூா், நம்பியாம்பாளயத்தைச் சோ்ந்த அமமுக பெண் பிரமுகா் ஜெயமணி (39) என்பது தெரியவந்தது. இதையடுத்து வடவள்ளி போலீஸாா் அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT