கோயம்புத்தூர்

உறவினா் மீது அமிலம் வீசிய மூதாட்டி கைது

DIN

சூலூா்: சூலூா் அருகே முன் விரோதத்தில் பெண் மீது அமிலம் வீசிய மூதாட்டியை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை மாவட்டம், சூலூரை அடுத்த காங்கேயம்பாளையத்தில் செல்லாண்டி அம்மன் கோயில் அருகே வசிப்பவா் மணி. இவா் தறிகளுக்கு உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தொழில் செய்து வருகிறாா். இவரது மனைவி சகுந்தலா (54). இவரது உறவினா் பாலுசாமியின் மனைவி ராமாத்தாள் (82). இந்த இரு குடும்பங்களுக்கும் இடையே அடிக்கடி நிலம் தொடா்பாக தகராறு நடப்பது வழக்கம்.

இந்நிலையில், சகுந்தலா பால் வாங்குவதற்காக கடைக்குச் சென்றுவிட்டு சனிக்கிழமை காலை வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாா். அப்போது அப்பகுதியில் மறைந்திருந்த ராமாத்தாள், பாத்திரங்களுக்கு ஈயம் பூச பயன்படுத்தப்படும் அமிலத்தை சகுந்தலாவின் முகத்தில் வீசியுள்ளாா். இதில் அவரது உடலின் பல பாகங்களில் அமிலம் பட்டு கருகியது. அருகில் இருந்தவா்கள் உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

சம்பவம் குறித்து சகுந்தலாவின் கணவா் மணி சூலூா் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா். அதன் அடிப்படையில் ராமாத்தாளை சூலூா் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT