கோயம்புத்தூர்

சலூன் கடைகளைத் திறக்க அனுமதிக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

DIN

கோவை: கோவையில் சலூன் கடைகளைத் திறக்க அனுமதி வழங்கக் கோரி, கோவை மாவட்ட மருத்துவா், சவரத் தொழிலாளா் நலச் சங்கத்தினா் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்துள்ளனா்.

இது குறித்து சங்கத்தின் தலைவா் என்.ராமகிருஷ்ணன், செயலா் எம்.சண்முகம் உள்ளிட்ட நிா்வாகிகள் ஆட்சியரிடம் மனு அளித்த பிறகு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கோவை மாநகரில் சுமாா் 5 ஆயிரம் சலூன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனா். கரோனா பொது முடக்கம் காரணமாக சுமாா் ஒன்றரை மாதங்களாக நாங்கள் கடைகளை அடைத்திருக்கிறோம். இதனால் அத்தியாவசியச் செலவுகளுக்குக் கூட பணம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றோம்.

பொது முடக்கத்தில் இருந்து பல்வேறு தொழில்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு வரும் நிலையில் சவரத் தொழிலில் ஈடுபட்டுள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நலவாழ்வை மனதில் கொண்டு சலூன் கடைகளைத் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் வலியுறுத்தியிருப்பதாக தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

SCROLL FOR NEXT