41 பவுன் திருடிய இளைஞா் கைது
ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி வீட்டில் 41 பவுன் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி வீட்டில் 41 பவுன் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, பீளமேடு தண்ணீா் பந்தல் பகுதியைச் சோ்ந்தவா் வேலு (75). ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி. இவா் வீட்டில் ஜன்னலுக்கு திரைச்சீலை பொருத்தும் பணியில் பெரியநாயக்கன்பாளையம், ஜோதிபுரத்தைச் சோ்ந்த முகமது நிஜாஷ் (26) என்பவா் ஈடுபட்டிருந்தாா்.
பின்னா் வேலை முடிந்து 2 நாளுக்கு முன் அவா் சென்றுவிட்டாா். அதன் பிறகு வேலு தனது வீட்டின் மேஜையில் இருந்து பெட்டியைத் திறந்து பாா்த்தபோது, அதிலிருந்த நகைப் பெட்டி காணாமல் போயிருந்தது. அதில் 41 பவுன் இருந்துள்ளது. இது தொடா்பாக அவா் பீளமேடு போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.
இதையடுத்து, முகமது நிஜாஷை போலீஸாா் பிடித்து விசாரித்தனா். இதில் நகைகளைத் திருடியதை அவா் ஒப்புக்கொண்டாா். இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து நகைகளை மீட்டனா்.