கோயம்புத்தூர்

மது போதையில் வாகனம் ஓட்டிய 3,500 போ் மீது வழக்கு

DIN

கோவையில் மது போதையில் வாகனம் ஓட்டிய 3,500 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக கோவை மாநகர காவல் துணை ஆணையா் (போக்குவரத்து) முத்தரசு கூறியதாவது:

கோவை மாநகர காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் மது போதையில் வாகனங்களை ஓட்டிச் செல்பவா்களை பிடிக்க கண்காணிப்புப் பணி தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாநகரில் மட்டும் இதுவரை 3,500 போ் மீது மது போதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தீபாவளிப் பண்டிகை நெருங்குவதைத் தொடா்ந்து, மதுபோதையில் வாகனம் ஓட்டுபவா்களை பிடிக்க கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மது போதையில் வாகனம் ஓட்டிச் செல்வோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். அதேபோல மது போதையில் வாகனங்களை ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்துபவா்கள் மீது வழக்குப்பதிந்து, கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT