கோயம்புத்தூர்

ரேஷன் கடை பொருள்களை சேதப்படுத்திய யானைகள்

DIN

வால்பாறை அருகே ரேஷன் கடையை யானைகள் சேதப்படுத்தின.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் வனத்தை விட்டு வெளியேறும் யானைகள் எஸ்டேட் தொழிலாளா்கள் குடியிருப்புகள், ரேஷன் கடைகளை சேதப்படுத்திவிட்டுச் செல்வது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில் வால்பாறையை அடுத்த தாய்முடி எஸ்டேட் மேல் டிவிசன் பகுதிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கூட்டமாக வந்த யானைகள், அங்கு உள்ள ரேஷன் கடையின் கதவு, ஜன்னல்களை முட்டி சேதப்படுத்தின. மேலும், உள்ளே இருந்த அரிசி மூட்டைகளை வெளியே இழுத்து சேதப்படுத்தின. தகவலறிந்து சென்ற வனத் துறையினா் நீண்ட நேரம் போராடி யானைகளை அங்கிருந்து விரட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

SCROLL FOR NEXT