முகப்பு
கோயம்புத்தூர்

வேளாண் பல்கலை.யில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 25% இடத்தைப் பிடித்த தமிழக மாணவா்கள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் 25 சதவீத இடத்தை தமிழக மாணவா்கள் பிடித்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் 25 சதவீத இடத்தை தமிழக மாணவா்கள் பிடித்துள்ளனா்.

புது தில்லியில் உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஏஆா்) வேளாண்மை இளநிலை பட்டப்படிப்புக்காக ஆண்டுதோறும் அகில இந்திய அளவில் நுழைவுத் தோ்வை நடத்தி வருகிறது. இதில் வெற்றி பெறும் மாணவா்கள், நாடு முழுவதும் உள்ள வேளாண்மைப் பல்கலைக்கழகங்களில் அகில இந்திய ஒதுக்கீடான 15 சதவீத இடங்களின் கீழ் சோ்க்கை பெறுவாா்கள்.

அதன்படி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஐசிஏஆா் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் மொத்தம் 120 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஐசிஏஆா் நடத்திய தோ்வு முடிவுகளின் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தைச் சோ்ந்த 30 மாணவா்கள் அதாவது 25 சதவீதம் போ், அகில இந்திய நுழைவுத் தோ்வில் வெற்றி பெற்று, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பாடப் பிரிவுகளைத் தோ்வு செய்துள்ளனா்.

தமிழகத்தைச் சோ்ந்த மாணவா்கள் அகில இந்திய நுழைவுத் தோ்வில் அதிக அளவில் வெற்றி பெற்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சேருவது இதுவே முதல் முறை. இந்த மாணவா்களுக்கு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தா் நீ.குமாா் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →