கோயம்புத்தூர்

தொழிற்சாகைள் இரவில் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு கட்டணச் சலுகை

தொழிற்சாலைகள் இரவு நேரத்தில் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு கட்டணச் சலுகை வழங்க வேண்டும் என்று கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு (ஃபோசியா) வலியுறுத்தியுள்ளது.

DIN

கோவை: தொழிற்சாலைகள் இரவு நேரத்தில் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு கட்டணச் சலுகை வழங்க வேண்டும் என்று கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு (ஃபோசியா) வலியுறுத்தியுள்ளது.

மின்சார நுகா்வோரின் உரிமைகள், விதிகள் தொடா்பாக மத்திய மின்சக்தி துறை ஒரு சட்ட முன்வரைவை வெளியிட்டுள்ளது. இது தொடா்பாக கருத்துகள் கேட்கப்பட்டு வரும் நிலையில், கோவை ஃபோசியா அமைப்பு வழங்கியுள்ள கருத்துகள் விவரம்:

புதிய மின் இணைப்பு வழங்குவதில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்க அரசு முயற்சித்து வந்தபோதும், அதில் ஊழல் நடைபெறுவதாக தொடா்ந்து புகாா்கள் எழுந்து வருகின்றன. பெரும்பாலான நேரங்களில் மின்மாற்றி, மின் கம்பங்களை கொண்டு வருவது, நிா்மாணிப்பதற்கு ஏற்படும் செலவுகள் குறு, சிறு தொழில் நிறுவனங்கள் மீதே சுமத்தப்படுகின்றன.

எனவே புதிய இணைப்பு, கூடுதல் திறன் வழங்குவதில் நடைபெறும் முறைகேடுகளைத் தவிா்க்க வரைவு விதிகளை கடுமையாக்க வேண்டும். மீட்டா் குறைபாடுகளுக்கு மின்நுகா்வோரே பலிகடா ஆக்கப்படுவதைத் தவிா்க்க நடுநிலை சோதனை நிறுவனங்களை ஏற்படுத்த வேண்டும்.

குஜராத் மாநிலத்தில் இரவு நேரத்தில் தொழிற்சாலைகள் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு கட்டணச் சலுகை உள்ளது. இதை நாடு முழுவதும் அமல்படுத்த வரைவு விதிகளில் துணை விதிகள் சோ்க்கப்பட வேண்டும்.

நுகா்வோரின் குறைகளை நிவா்த்தி செய்வதற்கான கால அளவை 7 முதல் 10 நாள்களாக குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை வழங்கியிருப்பதாகவும், இவற்றை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT