கோயம்புத்தூர்

கூழாங்கல் ஆற்றுப் பகுதியை சீரமைக்க கோரிக்கை

DIN

கூழாங்கல் ஆற்றுப் பகுதியை சீரமைக்க வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக பொதுப் பணித் துறை மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு அவா்கள் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

வால்பாறை பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவா்ந்து நீண்ட நேரம் பொழுதைக் கழிக்கக் கூடிய ஒரே பகுதியாக கூழாங்கல் ஆறு உள்ளது. இந்த ஆற்றின் கரை பகுதி அபாயகரமாக உள்ளது. மேலும் குறிப்பிட்ட பாறை இடுக்குகளில் அபாயம் இருப்பது தெரியவந்துள்ளது.

இதனால் அங்கு சென்று குளிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே பெரிய கற்களை கொண்டு நிரப்பி ஆற்றை சீரமைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT