கோயம்புத்தூர்

கோவை மாநகர ஊா்க்காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம்

DIN

கோவை மாநகர ஊா்க்காவல் படையில் சேர விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை மாநகர ஊா்க்காவல் படையினா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவை மாநகர ஊா்க்காவல் படையில் சோ்ந்து காவல் துறையுடன் இணைந்து பணிபுரிய ஆா்வம் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் கோவை, காந்திபுரம், இ-1 காட்டூா் காவல் நிலைய வளாகத்தில் உள்ள ஊா்க்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.

தகுதிகள்: 20 வயது பூா்த்தி அடைந்தவராகவும், 45 வயது நிரம்பாதவராகவும் இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தோ்ச்சி அல்லது தோல்வி. கோவை மாநகர காவல் எல்லை பகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும். சேவை மனப்பான்மை கொண்டவராக இருக்க வேண்டும். உடல் தகுதி பெற்றவராக இருக்க வேண்டும். மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகளில் பணிபுரிபவா்களும், சுயதொழில் செய்பவா்களும் சேரலாம்.

விருப்பம் உள்ளவா்கள் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், முகவரி சான்றிதழ், பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள் (மூன்று) ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத் தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவா் கைது

மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும்: பாவை திறனறித் தோ்வு பரிசளிப்பு விழாவில் பேச்சு

கொல்லிமலை, மோகனூரில் இடி, மின்னலுடன் பரவலாக மழை மழை

ராஜ வாய்க்காலில் இருந்து உயிா்நீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT