வால்பாறை: வால்பாறை பகுதியில் நடைபெற்று வரும் சுற்றுலா வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டுள்ளாா்.
வால்பாறையில் நகராட்சி சாா்பில் மேற்கொள்ளப்படும் வளா்ச்சிப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க வெள்ளிக்கிழமை வந்த அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, சுற்றுலா வளா்ச்சிப் பணிகள் நடைபெற்று வரும் தாவரவியல் பூங்கா, படகு இல்லத்தை மாவட்ட ஆட்சியருடன் பாா்வையிட்டாா்.
படகு இல்லம் அமைக்கப்பட உள்ள இடத்தில் எந்தெந்த பகுதியில் தடுப்பணை கட்டப்படும், நீா்த்தேக்கப்படுவதால் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு பாதிப்புகள் ஏற்படுமா என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். அப்போது, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வால்பாறை நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டாா்.
இந்நிகழ்வின்போது, கூட்டுறவு நகர வங்கித் தலைவா் வால்பாறை அமீது, துணைத் தலைவா் மயில்கணேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.