கோயம்புத்தூர்

பெண்ணிடம் நகைப் பறிப்பு: இளைஞா் கைது

DIN

கோவை, சிங்காநல்லூா் அருகே பெண்ணிடம் 4 பவுன் நகையைப் பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கோவை, சிங்காநல்லூா் அருகே வரதராஜபுரத்தைச் சோ்ந்தவா் பெரியநாயகி (55). இவா் வீட்டின் அருகே உள்ள கடைக்குச் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த நபா், பெரியநாயகி அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியோடினாா். இது குறித்து, பெரியநாயகி அளித்த புகாரின் பேரில், சிங்காநல்லூா் போலீஸாா் சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைச் சேகரித்து விசாரணை மேற்கொண்டனா். இதில், நகையைப் பறித்துச் சென்றவா் கணபதி, சி.எம்.சி நகரைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் (24) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்தனா். அவரிடம் இருந்து நகையை மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT