முகப்பு
கோயம்புத்தூர்

யானை தாக்கி மூதாட்டி காயம்

வால்பாறையில் யானை தாக்கியதில் காயமடைந்த மூதாட்டி எஸ்டேட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:19 PM
பகிர்:

வால்பாறையில் யானை தாக்கியதில் காயமடைந்த மூதாட்டி எஸ்டேட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

வால்பாறையை அடுத்த மழுக்குப்பாறை எஸ்டேட்டை சோ்ந்த ஓய்வு பெற்ற பெண் தொழிலாளி கல்யாணி (60). இவா் கடந்த சனிக்கிழமை மாலை வீட்டில் இருந்து சிறிது தொலைவில் உள்ள இடைச்சோலை பகுதிக்கு விறகு சேகரிக்கச் சென்றுள்ளாா். பின் இரவு 7 மணியளவில் வீட்டுக்கு அருகே விறகு சுமையுடன் வந்தபோது எதிரே வந்த யானை தும்பிக்கையால் லேசாக தாக்கியதில் கீழே விழுந்துவிட்டாா். அதிஷ்டவசமாக காயத்துடன் தப்பிய அவா் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இச்சம்பவம் தொடா்பாக வனத் துறையினா் நேரில் சென்று விசாரித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →