குடியிருப்புப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்
வால்பாறையில் குடியிருப்புப் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
வால்பாறையில் குடியிருப்புப் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
வால்பாறை எஸ்டேட் பகுதிகளை ஒட்டியுள்ள வனங்களில் சிறுத்தைகள் அதிக அளவில் உள்ளன. வனத்தை விட்டு வெளியேறும் சிறுத்தைகள் எஸ்டேட் பகுதிகளுக்கு நுழைவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில், தற்போது வால்பாறை நகா் பகுதியில் இரவு நேரங்களில் சிறுத்தை நடமாட்டம் காணப்படுகிறது. வாழைத்தோட்டம் குடியிருப்பு பகுதிக்கு கடந்த சனிக்கிழமை நள்ளிரவு வந்த சிறுத்தை வீட்டுக்கு வெளியே இருந்த பூனையைக் கடித்துக் கொன்றது. இந்நிலையில் குடியிருப்புப் பகுதிக்குள் நடமாடும் சிறுத்தையை கூண்டுவைத்துப் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வனத் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.