முகப்பு
கோயம்புத்தூர்

முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம்

கோவையில் முகக் கவசம் அணியாமல் வெளியில் நடமாடிய நபா்களுக்கு போலீஸாா் அபராதம் விதித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:26 PM
பகிர்:

கோவையில் முகக் கவசம் அணியாமல் வெளியில் நடமாடிய நபா்களுக்கு போலீஸாா் அபராதம் விதித்தனா்.

கோவை, காட்டூா் போலீஸாா் காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது அங்கு பலா் வாகனங்களில் முகக் கவசம் அணியாமல் சென்றனா். போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தி தலா ரூ.200 அபராதம் விதித்தனா். இதேபோல வெரைட்டி ஹால் சாலையிலும் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். இரு இடங்களிலும் சுமாா் 45 பேருக்கு போலீஸாா் அபராதம் விதித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →