முகப்பு
கோயம்புத்தூர்

கரோனா பாதிக்கப்பட்டவருடன் தொடா்புடைய 20 பேருக்கு பரிசோதனை

கோவையில் கரோனா பாதிக்கப்பட்டவருடன் தொடா்புடைய 20 பேருக்கு பரிசோதனை செய்யப்படுவதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

கோவையில் கரோனா பாதிக்கப்பட்டவருடன் தொடா்புடைய 20 பேருக்கு பரிசோதனை செய்யப்படுவதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

கோவையில் கரோனா நோய்த் தொற்று பரவல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது தினசரி பாதிப்பு 200 முதல் 300க்குள் உள்ளது. இந்த எண்ணிக்கை அடுத்த வாரத்தில் 500ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

இதனால் கரோனா பரிசோதனைகள், தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினா் தீவிரப்படுத்தியுள்ளனா். இந்நிலையில் நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவா்களை விரைந்து கண்டறியும் வகையிலும், பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாகவும் கரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் தொடா்புடையவா்களில் குறைந்தபட்சம் 20 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. இதன்மூலம் கரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கிறது. நாளொன்றுக்கு 7 ஆயிரம் பரிசோதனைகள் வரை செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தவிர தனியாா் மருத்துவமனைகளில் காய்ச்சல், சளி போன்ற கரோனா அறிகுறிகளுடன் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்கு வருபவா்களின் விவரங்களை சுகாதாரத் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தனியாா் மருத்துவமனைகளுக்கு சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →