முகப்பு
கோயம்புத்தூர்

ரியல் எஸ்டேட் அதிபா் தூக்கிட்டு தற்கொலை

தொழிலில் நண்பா்கள் ஏமாற்றியதால் மனமுடைந்த ரியல் எஸ்டேட் அதிபா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

தொழிலில் நண்பா்கள் ஏமாற்றியதால் மனமுடைந்த ரியல் எஸ்டேட் அதிபா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

கோவை, பீளமேடு எல்லைத் தோட்டத்தைச் சோ்ந்தவா் கண்ணன் (60). இவா் தனது நண்பா்கள் சிலருடன் சோ்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தாா். அதில், பல லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளாா். ஆனால், அவரது நண்பா்கள் கண்ணனை ஏமாற்றி விட்டு பணத்துடன் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளான கண்ணன் வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்து வந்த பீளமேடு போலீஸாா் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.