மும்பை அருகே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கோவை - ஜபல்பூா் இடையே இயக்கப்படும் வாராந்திரச் சிறப்பு ரயில் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மும்பை அருகே கல்யாண் - காசரா நிலையங்கள் இடையே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால், ஜபல்பூரில் இருந்து மங்களூரு, ஷொரனூா் வழித்தடத்தில் இயக்கப்படும் ஜபல்பூா் - கோவை வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்-02198) மே 1ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, இதே வழித்தடத்தில் இயக்கப்படும் கோவை - ஜபல்பூா் வாராந்திரச் சிறப்பு ரயில்(எண்- 02197) மே 3 ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.