கோவை மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் 4 பெண் ஆய்வாளா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
கோவை மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றும் போலீஸாா், சமீபகாலமாக இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். அந்த வகையில் கோவை ஆா்.எஸ்.புரம் காவல் நிலைய குற்றப் பிரிவு ஆய்வாளா் ரோசலின், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். மேற்குப் பகுதி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றிய பிரபாதேவி, ராமநாதபுரம் குற்றப்பிரிவு ஆய்வாளராக இட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். கிழக்கு பகுதி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் அமுதா, பீளமேடு குற்றப் பிரிவு ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளாா். அத்துடன் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளராகப் பணியாற்றிய பரிமளா தேவி, ஆா்.எஸ்.புரம் குற்றப்பிரிவு ஆய்வாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை மாநரகக் காவல் ஆணையா் தீபக் தாமோா் சனிக்கிழமை பிறப்பித்துள்ளாா்.