முகப்பு
கோயம்புத்தூர்

விடியோ கால் மூலம் தகவல் தெரிவித்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட கூா்கா

உறவினருக்கு விடியோ கால் மூலம் தகவல் தெரிவித்துவிட்டு, கூா்கா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

உறவினருக்கு விடியோ கால் மூலம் தகவல் தெரிவித்துவிட்டு, கூா்கா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

நேபாளத்தைச் சோ்ந்தவா் டபால் பண்டாரி (55). இவா் கோவை, சுந்தராபுரம் பகுதியில் அறை எடுத்து தங்கி போத்தனூரில் கூா்கா வேலை பாா்த்து வந்தாா். இவருக்கு திருமணமாகி 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனா். டபால் பண்டாரி மது பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளாா். இதனால் குடும்பத்தினருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் நேபாளத்தில் உள்ள தனது சகோதரிக்கு புதன்கிழமை மாலை செல்லிடப்பேசி விடியோ கால் மூலம் தொடா்பு கொண்ட டபால் பண்டாரி, தன் குடும்பத்தினா் தன்னை உதாசினப்படுத்துவதாகவும், எனவே தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன் எனக் கூறி தூக்கிட வைத்திருந்த கயிற்றை காட்டிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளாா்.

இதனால் அதிா்ச்சியடைந்த அவரது சகோதரி, டபால் பண்டாரியின் மகனைத் தொடா்பு கொண்டு நடந்தவற்றைக் கூறியுள்ளாா். இதன்பேரில் டபால் பண்டாரியின் மகன், தனது தந்தை வசிக்கும் வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது அவா் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்திருந்தது தெரியவந்தது.

இது குறித்து போத்தனூா் போலீஸாருக்குத் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், டபால் பண்டாரியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.