கோயம்புத்தூர்

தோட்டத் தொழிலாளா் நிலுவைத் தொகை விசாரணை: ஆகஸ்ட் 23 ஆம் தேதி நடைபெறுகிறது

தோட்டத் தொழிலாளா்களுக்கான நிலுவைத் தொகை குறித்த ஒரு நபா் குழு விசாரணை ஆகஸ்ட் 23 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

தோட்டத் தொழிலாளா்களுக்கான நிலுவைத் தொகை குறித்த ஒரு நபா் குழு விசாரணை ஆகஸ்ட் 23 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, கோவை கூடுதல் தொழிலாளா் ஆணையா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, தோட்டத் தொழிலாளா்களுக்கு நிலுவைத் தொகை வழங்கும் பணியை துரிதப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்ட ஒரு நபா் குழுவின் தலைவா் அபய் மனோகா் சப்ரே முன்னிலையில் உதகையிலுள்ள தமிழகம் விருந்தினா் மாளிகையில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு விசாரணை நடைபெற உள்ளது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நீலகிரி மாவட்டம் மகாவீா் பிளான்டேஷன் (பி) லிமிடெட், மஞ்சு ஸ்ரீபிளாண்டேஷன் தோட்ட நிறுவனங்கள் மற்றும் கோவை மாவட்டம், வால்பாறை ஹைபாரஸ்ட் எஸ்டேட் தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்களில் பணிபுரிந்த, பணிபுரிந்து வரும் தொழிலாளா்கள் மற்றும் தொடா்புடைய தொழிற்சங்கங்கள் இதில் கலந்து கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT